Sad Quotes in Tamil With Images – Love Sad – Quotes in Tamil
Sad Quotes in Tamil With Images
यदि आप दुखी हैं, तो यहां आपको तमिल में एक से अधिक अनोखे दुखद उद्धरण मिलेंगे, जो केवल आपकी दुखद अभिव्यक्ति को दर्शाने के लिए हैं, आप अपनी दुखद अभिव्यक्ति को अपने परिवार, दोस्तों, किसी भी व्यक्ति से प्यार कर सकते हैं, जिसे आप चाहते हैं और अपने तमिल व्यक्त करें तमिल फॉन्ट में इन सुंदर उदास उद्धरण छवियों के माध्यम से उदास उद्धरण
பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில்
இதயங்கள் தா ( தூ) ங்காது
நம் உறவாக இல்லாத போதும்
அவர்களின் மரணம் மனதை பாதிக்கதான் செய்யுது

நினைவுகளும் சுமை
மனதுக்கு
தொல்லையாகும் போது
நேசித்தலை விட பிரிதலின் போது
உன் நினைவுகள் இரட்டை சுமை…
மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு
உன் இதயத்தை…
ஏற்றுக்கொள்ள தாங்க முடியாத
இழப்புகளிலும்
துயரத்திலும் விதிமேல்
பழிபோட்டு மனதை
தேற்றிக்கொள்வோம்
( மரணத்தை ஜெயித்தவர் யாருமில்லை)

கண்களில் மிதந்த
அழகிய காட்சியெல்லாம்
சில நேரங்களில் தூசியாகி
கண்ணீரை தருகிறது.
உறக்கம் தொலைந்த இரவுகளில்
உறங்கிய நினைவுகள்
விழித்துக்கொ(ல்)ள்கிறது…
சில ரணங்களை
மறக்க ஏதோவொன்றை
மனம் ரசிக்கதான்
வேண்டும்

கலைந்து போன
கனவிலும் வலியான நினைவுகள்
நிஜத்தின் வலியில்
கற்பனை எல்லாம்
இறந்து போனது
சில நேரங்களில் தனிமை கடினம்
சில நேரங்களில் தனிமை
தான் இனிமையான தருணம்…!
பசித்தவருக்கு தெரியும்
உணவின் அருமை…
இழந்தவருக்கு புரியும்
உறவின் அருமை….
சிரித்த நிமிடங்களை விட,
அழுத நிமிடங்களே…
என்றும் மனதை
விட்டு நீங்குவதில்லை….
(ஞாபகங்கள்)
சிலரது வாக்குறுதிகள்
தண்ணீரில் எழுதும்
எழுத்துக்களை போன்றதே….
புகைப்படத்திலும்
புன்னகைப்பதில்லை
புன்னகைப்பதே
மறந்துவிடுகிறது சிலருக்கு…
( விரக்தி )

பேச நிறைய
இருக்கும் போது
பேசுவதற்கு பிடித்தவர்கள்
அருகில் இருப்பதில்லை
நிஜம்
ஒரு நொடி வலி
நினைவு
ஒவ்வொரு நொடியும் வலி
தேவைக்கு அதிகமான
நினைவுகளும் கடனும்
தூக்கத்தை
பறித்துக்கொள்ளும்
சூழ்நிலைனு மனதை
ஆறுதல்
படுத்திக் கொண்டாலும்
சில வலிகளை மட்டும்
தவிர்க்க முடிவதேயில்ல
சில விசயங்களில்
என் தலையணைக்கு
தாகம் போல
தினமும் கண்ணீரை
கடனாக கேட்கிறதே
எழுதப்படாமல்
விட்ட எண்ணற்ற
காவியங்களை விட
வாசிக்கப்படாமல்
வைக்கப்பட்ட
காவியங்களுக்கே
வலி அதிகம்
வார்த்தைகளால்
சிதைவது
மனம் மட்டுமல்ல
அந்த உறவும் தான்
புகைவண்டி என்னதான்
வேகமாகச் சென்றாலும்
அதைவிட வேகமாக
பின்நோக்கியே
செல்கிறது மனது
நினைவுகள்
நிறைந்து கொண்டே
செல்கிறது ஆனால்
நிலையாய் நிஜத்தில்
பாதி பேர் கூட இல்லை
மனதின் வலிகளை
மறைத்து
போலி வேடமிட்டு
புன்னகைக்கிறது
பல முகங்கள்
சிலரின் அன்பு
அழகான நினைவுகளை
கொடுத்து செல்கிறது
சிலரின் அன்பு
ஆழமான காயத்தை மட்டும்
கொடுத்து செல்கிறது
உள்ளத்தின் உளறல்கள்
பலருக்கு புரிவதில்லை
அது உடைந்து கிடந்தாலும்
கவனிக்க யாருமில்லை
Recent Comments